
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகர் அருகே ஒரு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதில் இரண்டு சிறுவர்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். இதன் காரணமாக அங்கு உள்ளாட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கொசுவை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கொசுவை பிடித்துக் கொடுத்தால் இந்திய மதிப்பின்படி 1.50 காசுகள் வழங்கப்படுமாம். மேலும் இதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.