ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் மனிதாபிமானத்தை வெட்கப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீல்சேரில் அமர்ந்திருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதலில் ஒரு நபரால் அறையப்பட்டார். பின்னர், காவி உடை அணிந்த காவல்துறை சேர்ந்த நபர் ஒருவர் வீல்சேரில் இருந்தவரை தள்ளிவிட்டார். இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”hi” dir=”ltr”>दिव्यांग के साथ ऐसी हरकत, झकझोर देगा ये वीडियो…<br><br>जयपुर रेलवे स्टेशन से इंसानियत को शर्मसार करने वाला वीडियो आया है जहां एक दिव्यांग के ऊपर एक ओर पुलिसकर्मी ने लाठी बरसाई, वहीं एक बुज़ुर्ग भी उसे थप्पड़ मारता दिखा. दिलों को झकझोर रहा है ये वीडियो.<a href=”https://twitter.com/hashtag/jaipur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#jaipur</a> | <a href=”https://twitter.com/hashtag/video?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#video</a> <a href=”https://t.co/OO6Im8V9L9″>pic.twitter.com/OO6Im8V9L9</a></p>&mdash; NDTV India (@ndtvindia) <a href=”https://twitter.com/ndtvindia/status/1963529059721245099?ref_src=twsrc%5Etfw”>September 4, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகமோ அல்லது ரயில்வே காவல்துறையோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிகழ்வு, பொது இடங்களில் பாதுகாப்பு பணியாளர்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலர் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.