சென்னை சாலிகிராமம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 17 மாடி கட்டிடம் தரம் மோசமாக உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வீடு என்று எதனை சொல்வீர்கள்? நெஞ்சம் பதைப்பதற்கு செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . உறுதியற்ற இந்த கட்டிடம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.