
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்குள்ள குணா குகைக்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் செலவுக்காக 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த நிலையில், அங்கிருந்த குரங்கு ஒன்று திடீரென அவர்களது பணப்பையை பிடுங்கிவிட்டு ஓடியது. பின்னர் அந்த குரங்கு ஒவ்வொரு நோட்டாக மரத்தின் மீது இருந்து கீழே வீசிய நிலையில் அங்கிருந்தவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் குரங்கின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.