விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இது நடைபெறும் விவாதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை வெகுவாக இழுத்து உள்ளது. அதாவது இந்த வாரம் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொள்ளும் நபர்கள் என்று விவாதிக்கப்பட்டது. அதில் ரசிகர்களிடம் கோபிநாத் கேட்ட கேள்விக்கு அவர் கூறியுள்ள பதில், அவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் படத்தில் நடிகரின் என்ரியை பிரசவத்தினை சம்பந்தப்படுத்தி பேசியுள்ளார்.