ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் பகுதியை சேர்ந்த அதர்சிங் மற்றும் அவரது சகோதரர் பகதூர் சிங் இடையே வெகு காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே பகதூர் சிங் தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு சென்றுள்ளார். இதை அறிந்து கொண்ட அதர் சிங் தனது குடும்பத்தினருடன் அதே நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது பகதூர் சிங் மகன் தாமோதர் நிலத்தில் டிராக்டரால் உழுதுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாமோதரன் சகோதரரும் அதர் சிங்கின் மகனுமான நிர்பத் டிராக்டர் முன்பு போய் நின்றுள்ளார். இதனால் கோபமடைந்த தாமோதர் டிராக்டரை முன்னும் பின்னுமாக 8 முறை நிர்பத் மீது ட்ராக்டரை ஏற்றியுள்ளார். இதில் ட்ராக்டருக்குள் சிக்கி பரிதாபமாக உடல் நசுங்கி நிர்பத் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாமோதரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.