மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினரிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அந்தவகையில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 20ஆம் தேதி அதிமுக + பாமக+ தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் மறைமுக பேச்சுவார்த்தை தற்போது சமூக உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.