ஒரு வழக்கிற்கே சீமான் பயந்துவிட்டார், திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு பெண் வழக்கு கொடுத்ததற்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன், அவரிடம் பிடித்தது தைரியம் தான். ஒரு புகாருக்கு பயந்து நாங்களும் திராவிட கட்சிகளும் பங்காளி என்கிறார். ராமநாதபுரத்தில் திமுக நிற்கவில்லை என்றால் சீமான் நிற்பாராம், திமுகவின் பி கட்சி என்று நாம் தமிழர் சொல்லிக் கொள்ள வேண்டியதுதானே என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.