கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், நாளை எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் இன்றிரவே பெங்களூரு வர கர்நாடகா காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெற்றி பெறும் எம்எல்ஏக்களை விடுதிகளில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
