தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர எதுவாக நாளை ஜன. (18) விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையில் மாற்றம் இல்லை என்றார். இதனால் நாளை பள்ளிகள் செயல்படும் என்பது உறுதியாகியுள்ளது.