தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு உயிரை விடப் போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சீமான் உடனடியாக பேச வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. இந்நிலையில் சீமான் பேசாததால் தற்போது முதல் தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக சாப்பிடப் போகிறேன் என்றும் நாளை வரை உயிரோடு இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.