எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில் வங்கிகளில் லாக்கர் சேவையை பயன்படுத்துவோர் புதிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று RBI வலியுறுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பயனர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால், லாக்கரை காலி செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எனவே லாக்கர் பயன்படுத்துவோர் உடனடியாக வங்கிக் கிளையை அணுகவும்.