உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை 45 நாட்களுக்கு முன்பு நாய்  ஒன்று கடித்துள்ளது. இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சிறுவன் எந்த உணவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்த குடும்பத்தினர் விசாரித்த போது தன்னை நாய் கடித்ததை பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுவனை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். பின்னர் சித்த மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கடித்த நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.