
மனிதர்களை விட நாய்கள் மீது அதிக பாசம் வைக்கும் காலம்தான் இது. நண்பர்களுடன் நடை பயிற்சிக்கு போனவர்கள் செல்லமாக வளர்த்த பிராணிகளை கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எனவே முடியாத அளவுக்கு உள்ளனர். நாய்கள் தான் உலகம் என்ற அளவுக்கு ஒரு சிலர் உள்ளனர். நாய்கள் நன்றி உள்ள பிராணி என்பதுடன் தன்னுடைய எஜமானர்களுக்காக எதையும் செய்ய துணியும். இதனாலையே நாய்களை பலருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட நாய்கள் ஒருவேளை இறந்துவிட்டால் அல்லது காணாமல் போனால் அவர்களது எஜமானர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
இந்த நிலையில் சென்னையில் தான் வளர்த்த நாயை காணவில்லை என்று உரிமையாளர் ஒட்டி உள்ள போஸ்டர் வைரல் ஆகியுள்ளது. தாம்பரம் மற்றும் முடிச்சூர் சாலையில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரில் வெற்றி என்ற டாபர்மேன் நாய் காணவில்லை என்றும் தேடி தருவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் போட்டோவுடன் அச்சிடப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் அழைப்பதற்கு செல்போன் நம்பரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.