இசையமைப்பாளர், நடிகர், டைரக்டர், படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, அண்மையில் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து இருந்தார். சென்ற மே 19-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இதில் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசியபோது “இளைஞர்கள் போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, கடைசியில் சுயநினைவை இழக்கும் அளவிற்கு சென்று விடுகின்றனர். ஆகவே இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்கவேண்டும்” என்று அவர் பேசினார்.