பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு மெக்கானிக் இளைஞன், தனது மனைவியை ஆசிரியர் தகுதித் தேர்விற்கு (TET) அழைத்துச் சென்றபோது போலீஸாரிடம் சிக்கினார். “நான் படிக்கவில்லை என்றாலும், என் மனைவி படித்து பெரிய ஆளாக வேண்டும்; வீட்டில் ஒருவராவது பட்டதாரியாக இருக்க வேண்டும்” என அந்த இளைஞன் கூறிய பதில் போலீஸாரையே நெகிழ வைத்தது. குடும்பத்தினர் எதிர்த்தாலும் மறைமுகமாகத் தனது மனைவியின் கனவுக்குத் தோள் கொடுக்கும் இந்த இளைஞனின் செயல், உண்மையான காதலுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
Even today, thousands of people struggle in the same way to support their wife's dreams.
VC: @/ tanu_sri_actress pic.twitter.com/8Ro1k2uOcw
— AnuCreate.in_ (@Imdead108_in) March 8, 2026
வெற்றி பெற்ற பிறகு துணையை கைவிடுபவர்களுக்கு மத்தியில், இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும். “துணையாக வருபவர்களின் கனவுகளுக்குத் தடை போடாமல், அவர்களுக்கு ஏணியாக இருப்பதே உண்மையான அன்பு” என்கிற கருத்தை இந்தச் செய்தி உரக்கச் சொல்கிறது. மனைவியின் வெற்றியில் தனது மகிழ்ச்சியைக் காணும் இந்த மெக்கானிக் இளைஞனுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
