பிரபல இயக்குனர் மித்ரன் ஜவகர் தற்போது அரியவன் என்ற திரைப்படத்தைஇயக்கியுள்ளார். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஈஷான் ஹீரோவாகவும், பிரணாசி ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அரியவன் பட நிகழ்ச்சியின் போது நடிகர் பாக்யராஜ் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, அரியவன் படத்திற்காக ஈஷான் கராத்தே மற்றும் நடிப்பு பயிற்சி போன்றவைகளை எடுத்துள்ளார். ஆனால் நான் நடிக்க வந்த புதிதில் எந்த ஒரு நடிப்பு பயிற்சியும் எடுக்கவில்லை.

என்னைப் போன்று பாண்டியராஜ் மற்றும் பார்த்திபன் போன்றவர்களும் நடிப்பு பயிற்சி எடுக்காமல் தான் வந்தார்கள். ஆனால் நடிகர் ஆன பிறகு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். நான் நடிக்க ஆரம்பித்த புதிதில் தினமும் காலை எழுந்து ஷேவிங் செய்ய வேண்டும். ஆனால் தற்போது கதாநாயகர்கள் தாடியோடு இருக்கிறார்கள். நான் முதலில் பாடல் காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டேன். உதடு அசைவுகள் சரியான முறையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது உதடு அசைவுகளை பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது என்றார். மேலும் அரியவன் படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினார்.