விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் ஏழாவது நிகழ்ச்சி 50 நாட்களில் நெருங்கி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு குறைவான வாக்குகளை பெற்று ஐசு வெளியேறினார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதள  பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் .

அந்த பதிவில் தன்னால் தன்னுடைய குடும்பத்திற்கு அவமானம் என்றும் தன்னை மன்னிக்கும் படி ரசிகர்களிடமும் குடும்பத்தாரிடமும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது என் மீது அக்கறை கொண்டு யுகேந்திரன், பிரதீப், விச்சு, அர்ச்சனா ஆகியோர் எனக்கு அட்வைஸ் செய்தார்கள் . ஆனால் நான் அதை கேட்கவில்லை அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.