
பாமக கட்சியின் கவுரவ தலைவர் ஜிகே மணி. இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாமகவில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் சூழலில் நான் இல்லை. நான் கட்சிக்கும் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கட்சிக்காகவும் மக்கள் பிரச்சினைக்காகவும் உழைத்த நிலையில் என்னை பற்றி சிலர் அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
அன்புமணி மற்றும் ராமதாஸ் விரைவில் இணைய வேண்டும் என்பதுதான் பாமகவினர் ஆசை. இது சோதனையான காலம். என்னவோ தெரியவில்லை பாமகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நான் எந்த விதத்திலும் காரணம் கிடையாது. பல ஆண்டுகளாக உழைத்த நான் பாமக கட்சி சிதற வேண்டும் என்று நினைப்பேனா.
நான் மொத்தம் இரண்டு முடிவுகளை எடுத்துள்ளேன். ஒன்று என் குடும்பத்தோடு தலைமுறைவாவது. மற்றொன்று என் உயிரை விடுவது. என்னை பற்றி உங்களுக்கே தெரியும் என்பதால் நான் கண்டிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணியை சந்தித்து சமாதானம் பேசுவேன் என்றார். மேலும் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்ற செய்தியை கேட்டவுடன் நான் கண்ணீர் விட்டு அழுதேன் என்றும் கூறினார்.