பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய திருச்சி சூர்யா அண்ணாமலை பொய் பிம்மம் உடையும் என தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பதே மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய்யாகிவிட்டது எனவும் விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும் எனவும் தெரிவித்துள்ளார்.