விஜய்யுடன் நாளைய தீர்ப்பு, அஜித்துடன் அமராவதி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை கவிதா. சமீபத்திய இவர் அளித்துள்ள பேட்டியில், ‘கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மகன் உயிரிழந்தார். அந்நேரம் எனது கணவரும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரிடம் இந்த தகவலை மறைத்தேன். பின் சில நாட்களிலே எனது கணவரும் இறந்துவிட்டார்’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதன்பின் நான் 3 முறை தற்கொலைக்கு முயன்றேன். இரண்டு மகள்களுக்காகத் தான் நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கல் நெஞ்சக்காரி அதனால் தான் என்னுடைய இருதயம் இன்னும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.