திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வருகிற 18-ஆம் தேதி பாமணி, கோட்டகம், விளக்குடிகிச்சன், ஆலத்தம்பாடி போன்ற நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், எம்.எல்.ஏ மாரிமுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more