தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் நுகர் பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓய்வூதிய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர் பொருள் சங்க ஏ.ஐ.டி.யு.சி மண்டல செயலாளர் பாண்டித்துரை, மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, அரசு போக்குவரத்து கழக சங்க மாநில துணைத்தலைவர் துரை மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக போராட்ட குழுவைச் சேர்ந்த வேணுகோபாலன், மாரியப்பன், ஞானசேகரன், தியாகராஜன், முருகேசபிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி மூலமாக வழங்கப்படுகின்ற ரூ.1000 முதல் 3000 வரை சொற்ப ஓய்வூதியத்தை கொண்டு மருத்துவ செலவு, அன்றாட செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை. அதனால் வாணி நுகர்பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்துள்ளார். ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் தில்லைவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துள்ளார்.