
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு தற்போது உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று இருந்த நிலையில் தற்போது நுரையீரல் சளியால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும் நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் சென்று நானும் நலம் விசாரித்தேன். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உரையை மக்கள் கேட்பார்கள். அவர் நல்ல முறையில் மீண்டு வருவார் என கூறியுள்ளார்.