பாலியல் வன்கொடுமையால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தற்போது 16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளை அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மது அருந்த செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்ததால் அவமானம் தாங்க முடியாத சிறுமிகள் விளையாட செல்வது போல வயல்வெளிக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.