நாட்டிற்காக உயிர் துறந்த முதல் அக்னிவீரன் ஆகியிருக்கிறார் அக்ஷய் லக்ஷ்மன் என்ற இளைஞர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிவீர் திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் அக்னிவீரராக ராணுவத்தில் சேர்ந்து கொண்ட அக்ஷய்க்கு நாட்டின் உயரமான சியாச்சின் பகுதியில் பணி கொடுக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆபரேஷனில் அவர் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.