சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டிய ஆசை சிலரை எளிதாகக் கதறவைக்கும் ஆபத்துக்களில் தள்ளுகிறது. அத்தகைய ஒரு சம்பவம் தற்போது அசாமில் நடந்துள்ளது. நாட்டின் மிக நீளமான பாலங்களில் ஒன்றான டாக்டர் பூபன் ஹசாரிகா பாலத்தில், ஒரு இளைஞர் பாலத்தின் தண்டவாளத்தில் தொங்கிப் புஷ்அப்கள் செய்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், பாலத்தின் மீது தொங்கியபடியே புஷ்அப்கள் செய்யும் இளைஞரைக் காண முடிகிறது. அவரது நண்பர்கள் இந்த அதிரடியான செயலைப் பதிவு செய்து, அதை யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். இது வெகுவாகப் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவில் வரும் செயல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பாலத்தின் உயரத்தில் ஒருவன் தவறினாலே உயிரிழக்கும் அபாயம் இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், எதற்காக இவ்வாறு ஆபத்தான செயலைச் செய்கிறார் என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றன.

“லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காக மட்டும் ஏன் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள்?”

“உண்மையில், இந்த நபருக்கு வேறு எதிரி தேவையில்லை, அவர் தனக்குத்தானே எதிரி!”

“இங்கே ஒரு சிறிய தவறும் நடந்திருந்தால், அது பேரழிவாக இருக்க வாய்ப்பு இருந்தது!”

என தெரிவித்துள்ளனர்.