
15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன.
எனவே காற்று மாசை குறைக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.