உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவால்ல அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா,சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோருக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பயணத்திற்கு முன்பு தங்கள் பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா இணையதளத்தில் விமான பயணிகள் பதிவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.