இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு கிருஷ்ணன் பேட்டி அளித்ததாவது “மாநாட்டில் ஓபிஎஸ் மரியாதை நிமித்தமாக சசிகலாவை புகழ்ந்தார்.

அதிமுகவில் இருந்து யார் விலகி இருக்கிறார்களோ அவர்களை தங்களுடன் இணைத்து நல்ல முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறினார். அதுமட்டுமின்றி யார் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர் அறிவித்தார்.