அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், உதவிகளை ஓட்டுனர் நடத்துநர்கள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் பெறப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.