நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு முறையில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க இந்த ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும் மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து திங்கட்கிழமை தோறும் காலை 8.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் ரயில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.