இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நவரத்தின கற்களால் ஆன நகைகளை அணிவதை அணிகின்றனர். ஆனால் சிலர் தங்களுடைய ராசிக்கு ஏற்றது போல ரத்தின கற்களை வைத்து நகைகளை அணிகிறார்கள். இவ்வாறு பலரும் விரும்பும் நவரத்தின கற்களின் தரத்தை கண்டறிவது என்பது சிரமமாக உள்ளது. அதனை எளிதில் எப்படி கண்டறிவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முத்து- இதனை நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் – இதனை கையில் வைத்துக் கொண்டு குதிரையின் அருகே சென்றால் குதிரை தும்பும்.

பச்சைக்கல்: குத்துவிளக்கு ஒளியின் முன்பு வைத்தால் சிவப்பு நிறமாக தோன்றும்

வைரம்: சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினாலும் அது உடையாது.

பவளம்- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம்- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம்- இதனை சந்தனம் வரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம்- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறிவிடும்

நீலக்கல்- இதனைப் பச்சிலை சாற்றில் போட்டால் ஒரு விதமான ஒளி வரும்.

இது குறித்த விவரங்கள் அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள மிக அரிதான ஒன்றாகும். இதனை அறிந்த இனிவரும் நாட்களில் நவரத்தின கற்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.