திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர்.

இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.