திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மதுரையில், அவருடைய சிலைக்கு மாலையணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார்.

அவர் பல கட்சிக்கு சென்று வந்தவர் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் ஒரு பச்சோந்தி. திமுக அரசு பொய்யாக பேசி ரூ.1000 தருகிறேன், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள். திமுக அரசுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகுட்டுவார்கள் என்று விமர்சித்துள்ளார்.