
இந்தியாவில் விவசாயிகளின் நலனை மேம்படுத்த அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெற விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைத்தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு 2.5 லட்சம், இரண்டாவது பரிசு 1.5 லட்சம், மூன்றாவது பரிசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு வட்டார மேலாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.