
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல், இறுதியில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தது. ஆனால் இந்த மோதலில் ஈரான் எதிர்பார்த்த அதிரடி ஆதரவை தனது நெருக்கமான கூட்டாளிகள் – ஹமாஸ், ஹெஸ்பொல்லா, சிரியா, பாகிஸ்தான், துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகியோரிடமிருந்து பெறவில்லை.
போரின் பரபரப்பான நேரத்தில், இவர்களில் யாரும் ஈரானுக்காக நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதனால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழ்நிலை, ஈரானை அதற்கு நம்பிக்கையாக இருந்த மூலோபாய கூட்டாண்மைகளை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
“என் பின்னால் யார் நிஜமாக துணை நின்றார்கள்?” என்ற கேள்விக்கு, இப்போர் நேரடியாக ஒரு கண் விழிக்கும் பதிலை ஈரானுக்கு அளித்திருக்கிறது.
1. ஹெஸ்பொல்லா – வாக்கு கொடுத்து விலகியது
ஈரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக கருதப்பட்ட ஹெஸ்பொல்லா, அமெரிக்க தலையீட்டுக்குப் பிறகு திடீரென நிலைப்பாட்டை மாறியது. ஆரம்பத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறிய ஹெஸ்பொல்லா, பின்னர் “ஈரான் தானாக சமாளிக்கும்” எனப் பின்வாங்கியது. இது ஈரானுக்கு எதிர்பாராத சோகமாக அமைந்தது.
2. ஹமாஸ் – குரல் கொடுத்தது, ஆனால் கை கொடுக்கவில்லை
ஹமாஸ் தொடக்கத்தில் போருக்கு ஆதரவாக பல வன்முறை அறிக்கைகள் வெளியிட்டது. ஆனால், நேரில் வந்து உதவ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடி கொடுக்காமல், பக்கவாட்டில் நின்றது. இதனால் ஹமாஸின் உறுதிப்பாடு மீதான நம்பிக்கையும் பிதுங்கியது.
3. சிரியா – நட்புக்குப் பின்னால் அமைதி
ஈரானின் பாரம்பரிய நட்பு நாடாக விளங்கும் சிரியா, இஸ்ரேல் தனது தாக்குதல்களுக்கு சிரிய வான்வெளியை பயன்படுத்தும்போதும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. இது இரு நாடுகளின் உறவிலும் கோளாறு ஏற்பட்டதைக் காட்டும் முக்கிய சிக்னலாகக் கருதப்படுகிறது.
4. பாகிஸ்தான் – சமநிலையின் பெயரில் பின்வாங்கல்
பாகிஸ்தான், ஆரம்பத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தாலும், பின்னர் ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை தாக்கியபோது, பாகிஸ்தான் விலகிய நிலை எடுத்தது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப், கத்தாருடன் ஒற்றுமையைப் பேணுவதாக அறிவித்ததால், ஈரானுக்கு எதிராகவே போனது.
5. துருக்கியே – நடுநிலை என்ற பெயரில் அமைதியோடு விலகியது
துருக்கியே வழக்கம்போல் நடுநிலை பாவனை எடுத்துக்கொண்டாலும், இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கே மென்மையாக சாய்ந்த நிலை எடுத்தது. ஈரானுக்கு ஆதரவாக எந்த பெரிய செயல்பாடுகளும் செய்யவில்லை. முக்கிய அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. ஆப்கானிஸ்தான் – நண்பனுக்கே நஞ்சாகிய நடவடிக்கை
தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகள் தஞ்சம் கோரியதையடுத்து, அதனை ஊடகங்களுக்கு கசியவிட்டது. இது ஈரானின் ரகசிய உளவுத் தகவல்களை உலகிற்கு அம்பலப்படுத்திய அதிர்ச்சி சம்பவமாக அமைந்தது.
முடிவில்…
இந்த மோதலில் ஈரான் ஒரு பெரிய பாடம் கற்றுள்ளது. நெருக்கமான கூட்டாளிகள் எல்லோரும் நேரில் வருவதற்குள் பின்வாங்கியதால், ஈரான் தற்போது தனது மூலோபாய கூட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இது வெறும் ராணுவ மோதல் அல்ல — உண்மையான நட்புகளையும் கூட்டாண்மைகளின் நம்பகத்தன்மையையும் சோதித்த ஒரு முக்கிய தருணமாக மாறியுள்ளது.