
இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை எனக் கூறிய அண்ணாமலைக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் ஞானி போல பேசும் அவருக்கு, ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தெரியும. அவர் வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குக்கிறார்.
தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாமல் வாயில் வடை சுடுவதாகவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “நம்பிக்கை துரோகி’ என்ற என்ற பெயருக்கு பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமி. சிலரின் சுயலாபத்திற்காக அதிமுகவை அழித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. என்று கூறியுள்ளார்.