நேற்றைய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. குஜராத் அணி ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜூக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங்க் செய்தபோது முகமது சிராஜ் பந்து வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சால்ட் ஒரு ரன் எடுத்தார். அதனையடுத்து விராட் கோலி ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் . அவருக்கு எதிராக பந்து வீசிய சிராஜூ பாதி வழியிலேயே பந்து வீச முடியாமல் திரும்பி உள்ளார்.

அப்போது சிராஜூ கையை அசைத்து என்னை மன்னித்து விடுங்கள் என்பது போல சைகையால் காட்ட பதிலுக்கு  கோலி பரவாயில்லை என்று கூறுகிறார். அப்போது இருவருடைய முகத்திலும் ஒரு விதமான அன்பு வெளிப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை ஆர்சிபி ரசிகர்கள் வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், பதற்றமாக இருந்தேன். ஏனென்றால் நான் ஏழு வருடங்களாக ஆர்சிபிக்காக விளையாடி இருக்கிறேன் .இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் பதட்டமாகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்று போட்டிக்கு பிறகு சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.