ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாடி பகுதியில்  மாதேஷ் (24) என்ற இளைஞன் தனது நண்பருடன் சேர்ந்து வேதாச்சலம் என்பவரது வீட்டில் திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது.  அப்போது வேதாச்சலம் குடும்பத்தினர் மாதேஷை பிடித்து கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாதேஷ் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வேதாச்சலம் மற்றும் அவரது மகன் விஜயகுமார் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்க வேண்டியது அவசியம் என்றாலும், ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு நடந்து கொள்வது தவறு என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.