தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 8 மாநில திரைப்பட துறையிலுள்ள நடிகர்கள் கலந்துகொள்ளும் “செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்” எனும் கிரிக்கெட் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று (பிப்,.18) தொடங்கியது. இப்போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் போன்ற 6 நகரங்களில் நடக்கின்றன. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக ஆர்யா இருக்கிறார். இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி போன்றோர் விளையாடுகின்றனர்.

அதேபோல் தெலுங்கு வாரியர்ஸ் அணி கேப்டனாக நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான அகிலும், கேரள ஸ்டிரைக்கஸ் அணியின் கேப்டனாக குஞ்சாக்கோ போபனும், கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப்பும், பஞ்சாப் தி ஷேர் அணி கேப்டனாக சோனுசூட்டும், பெங்கால் டைகர்ஸ் அணி கேப்டனாக கிசுசென் குப்தாவும், போஜ்புரி தபாங்ஸ் அணி கேப்டனாக மனோஜ் திவாரியும் விளையாடுகின்றனர். வரும் மார்ச் 19- ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.