உத்தர பிரதேசம், உன்னாவ் மாவட்டம் கதன்கெடா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண்-30-ல் 2 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஆபாச செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேர்ந்த ரேணு ராஜ்புத் மற்றும் உன்னாவை சேர்ந்த நாஜ் கான் ஆகியோர் அரைகுறை ஆடையுடன் சாலையில் படுத்து புரண்டு, ஆபாச நடனம் ஆடி வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து நின்று பார்த்ததால், நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்றன. சில நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து நேரிடும் சூழலும் ஏற்பட்டது.

“>

இந்த சம்பவம் உன்னாவ் சதர் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றது. இதனை பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

“>