தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தற்போது உச்ச நடிகை ஆக இருந்து வருகிறார். சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசெய்தன் யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அண்மையில் விஜய் தேவர் கொண்ட உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே நடிகை சமந்தா சமீபத்தில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியலில் நுழைய போவதாகவும் அதிலும் ஆந்திர மாநில அரசியலில் நுழையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்ற செய்திகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.