தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இருந்து வருகிறார். தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்துவரும் திரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். முதலில் மாடலிங் துறையில் கலக்கிய இவர் அதன்பிறகு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக லியோ திரைப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திரிஷா லியோ படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்கி இருந்த நிலையில் விளம்பரங்கள் மற்றும் படங்கள் என மொத்தம் 60 லட்சம் ரூபாயும் வருடத்திற்கு 9 கோடி ரூபாயும் சம்பாதித்து வருகிறார். சென்னையில் இவருக்கு 6 கோடிக்கு மதிப்பிலான வீடு ஒன்று உள்ள நிலையில் ஆந்திராவிலும் ஒரு சொந்த வீடு உள்ளது. அதேசமயம் விலை மதிப்புள்ள பல கார்களை அவர் வைத்துள்ளார். இவ்வாறு த்ரிஷாவிடம் மொத்தமாக 100 கோடி சொத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.