பாஜக எம்பி கங்கனா ராணாவத்தை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் அந்த அதிகாரிக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. அதாவது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று கங்கனா கூறி வருகிறார்.

இதேபோன்று விமான நிலையத்தில் நடிகை கங்கனா கூறியதாக, கூறப்படும் நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் தன் தாயும் ஒருவர் என்பதால் தான் கோபத்தில் அவரை கன்னத்தில் அறைந்ததாக அதிகாரி கூறியுள்ளார். இந்நிலையில் விவசாயிகள் சங்கம் தற்போது ‌ குல்வீந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதன்படி பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்வீந்தர் கவுருக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.