தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் வேதம் என்ற பெயரில் வெளியானது.

இதன் ரீமேக் தான் தமிழில் வானம். இந்நிலையில் வேதம் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் அந்த படத்தில் அந்தப் படக்குழுவினர் பட அனுபவங்களை பகிர்ந்தனர். இந்த படத்தில் இயக்குனர் க்ரிஷ் கூறும்போது, படத்தின் விளம்பரத்திற்காக நடிகை அனுஷ்காவின் கவர்ச்சி போட்டோவை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்திருந்தோம்.

அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஓட்டுநர்கள் போஸ்டரை பார்த்ததும் சட்டென நின்றதால் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் போலீசார் அதனை அகற்றுமாறு கூறிய நிலையில் பின்னர் நாங்கள் அங்கிருந்து அகற்றினோம் என்று கூறினார்.

நடிகை அனுஷ்கா தற்போது வேதம் பட இயக்குனரின் காதி திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் அந்த படம் வருகிற 11-ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இயக்குனர் க்ரிஷின் பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.