பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், வெடி மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். நடிகை சமீரா ரெட்டி சினிமாவை விட்டு விலகினாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முதல் படத்துக்கு ஆடிஷன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் படத்தில் நடிப்பதற்காக சமீரா ரெட்டி முதல் முறையாக ஆடிசன் சென்றுள்ளார். ஆனால் அவரால் சரியான முறையில் பர்பாமென்ஸ் செய்ய முடியாமல் அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் ஒரு டெஸ்க் ஜாப் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது காலம் கழித்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு ஆல்பம் பாடலில் சமீரா ரெட்டி முதல் முறையாக நடித்துள்ளார். மேலும் சமீரா ரெட்டி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது சமீரா ரெட்டியா என்று பலரும் போட்டோவை பார்த்து ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.