
சென்னை எழும்பூரில் இன்று பிரபுதேவா தலைமையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான குழந்தைகள் கடும் வெயிலில் கூடியிருந்த நிலையில் அவர் வரவில்லை. இது சர்ச்சையான நிலையில் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று பிரபுதேவா வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.