மத்திய அரசின் PM SHRI என்ற பள்ளி திட்டத்தில் சேர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் PM SHRI பள்ளி திட்டத்தில் சேருவதற்கு முடிவு செய்துள்ள நிலையில் டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தற்போது வரை இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் நடைமுறைக்கு வரும் PM SHRI பள்ளி திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.