நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக மூன்று வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.